கோவையில் இந்து முன்னணி பிரமுகர் விஷமருந்தி தற்கொலை



கோவை போத்தனூரை அடுத்த மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (36). இந்து முன்னணி பிரமுகரான இவர் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கழிவறையை சுத்தம்  செய்யும் ரசாயனத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து ரஞ்சித்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தற்கொலை செய்துகொண்ட ரஞ்சித்குமார், இந்து முன்னணியின் மாநகர செய்தித்தொடர்பாளர் சசிகுமார் கொலையின் போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்த குமாரின் சகோதரர் ஆவார். 

முன்னதாகவே, போலீசார் தன்னை சசிகுமார் கொலையில் சந்தேகிப்பதாக கூறி வயிற்றை கிழித்து தற்கொலைக்கு முயன்றார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இந்த நிலையில், மூன்றாவது முறையாக தற்கொலை செய்ய முயற்சித்தபோது ரஞ்சித்குமார் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.​ 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...