கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்த அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மகேந்திரா கன்சல்டிங் பொறியாளர்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் வடிவமைப்பு, வரைவுத்திட்டங்கள், உள்கட்டமைப்புகள், போக்குவரத்துக்கு தேவையான உரிய சாலைகள், பயனாளிகளின் வசதிகள், திட்டத்திற்கு தேவையான நிலங்கள், பேருந்துகள் நிறுத்துவதற்கு தேவையான வசதிகள், பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் திட்டத்திற்கான செலவினத்தொகை போன்ற விவரங்களை விளக்கக்காட்சி மூலம் விளக்கி காட்டினார்கள். 

கூட்டத்தில் கலந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மாநகராட்சி உயர் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் ஆகியோர் சிறப்பான ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைப்பதற்கு அவரவர் துறை சார்ந்த கருத்துக்களை எடுத்துரைத்தனர். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஏ.லட்சுமனன், நகரமைப்பு அலுவலர் (பொ) எஸ்.ரவிச்சந்திரன், மாநகரப் பொறியாளர் (பொ) வி.பார்வதி மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள், கோவை அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், கோவை தெற்கு தீயணைப்பு மீட்புப்பணி அலுவலர், மாநகர காவல் போக்குவரத்து உதவி ஆணையர், உதவி பொறியாளர் மின்சார வாரியம் வெள்ளலூர், தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட சுற்றச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...