கோவை மாநகராட்சி சார்பாக செவிலியர்களுக்கு டெங்கு நோய் ஆரம்ப குறிப்புகள் பற்றி மேலாண்மை கருத்தரங்கம்

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக, கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று (ஆகஸ்ட் 23) கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் நேமிநாதன், அரசு மருத்துவமனை செவிலியர்கள், நகர்நல மையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, டெங்கு நோயின் ஆரம்ப குறிப்புகள் மேலாண்மை கருத்தரங்கம் நடத்தினார்கள்.

இந்த கருத்தரங்கத்தில், காய்ச்சலை எவ்வாறு பிரித்து கண்டறிவது, எந்த வகை காய்ச்சலை தொடர் சிகிச்சைக்காக உயர் மையத்திற்கு அனுப்புவது, காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஐசியு-வில் உரிய சிகிச்சை மேற்கொள்ளுவது என்பது பற்றி மருத்துவர் நேமிநாதன் பல்வேறு ஆலோசனைகளை செவிலியர்களுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....