காவிரி அணை மற்றும் நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்ட நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தது, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் ஏமாற்றப்பட்டது ஆகிய விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் கோவை புறநகர் மவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்ட தமிழக அரசை கண்டித்தும், நீட் தேர்வில் தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டது. 

பின்னர் பேசிய, திராவிடர் கழக நிர்வாகிகள் காவிரி விவகாரம், நீட் விவகாரம் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மாநில அளவில் நடைபெறுவதாக தெரிவித்தனர். கர்நாடகத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக வழகறிஞர்கள் ஒப்புதல் கொடுததும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். 

மேலும், நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பில் சி.பி.எஸ்.சி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் அதிகமாகவும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் குறைவாகவும் சேர்ந்து இருப்பதாகவும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்களுக்கான மருத்துவப்டிப்பிற்கான வாய்ப்புகளை இழந்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...