வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் ஒற்றை காட்டு யானை தாக்கி வேலுச்சாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒருவார காலமாக ஒற்றை காட்டு யானை மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.



இந்நிலையில் இன்று கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்றைய தினம் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள மயான பகுதிக்கு ஊர்பொதுமக்கள் அனைவரும் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென்று அருகே உள்ள காட்டிற்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென அனைவரையும் துரத்தியுள்ளது.

இதில் வேலுச்சாமி (62) என்பவரை தனது துதிக்கையால் இழுத்த யானை தொடர்ந்து அவரை மிதித்து கொன்றது. இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனிடையே, தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வராத வனத்துறையினரைக் கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நேரில் வரும்வரை உடலை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.



மேலும் உயிரை பலிகொண்ட காட்டு யானை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒற்றை காட்டு யானையை உடனடியாக கும்கி யானை வரவழைத்து பிடிக்கவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...