ஆதரவற்ற ஆயிரம் பேருக்கு உணவளித்த "புட் பேங்க்" தன்னார்வலர் அமைப்பு

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புட் பேங்க் தன்னார்வ அமைப்பின் சார்பில் ஆதரவற்றோர், சாலையோரம் வசிக்கும் என ஆயிரம் நபர்களுக்கு இன்று வஉசி மைதானத்தில் மாபெரும் உணவு வழங்கும் திருவிழா நடைபெற்றது.



இதுகுறித்து "புட் பேங்க்" தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், எங்களது இந்த புட் பேங்க் அமைப்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டு வருவதே இந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்படக் காரணம் ஆகும். ஒவ்வொருவரும் தங்களது பணியை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.



இந்த அமைப்பின் மூலமாக மனநலம் குன்றியோர், சாலையோரம் வசிப்போர், ஆதரவற்றோர் என்றுள்ள மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான முழு உதவிகளும் புட் பேங்க் அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, வஉசி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து கடந்த ஒரு வாரத்திற்குமுன்பே முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் மூலம் ஆதரவற்ற, மனநலம் குன்றிய நபர்களைக் கண்டறிந்த மக்கள் அவர்களை வஉசி மைதானத்தில் திரளச் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு இன்று வெஜ் பிரியானி, முட்டை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், நாங்கள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வரும் மக்களை புறக்கணிக்கிறோம். வேறு வழியின்றி, ஆதரவின்றி, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே சேவையாற்றி வருகிறோம்.



அதுமட்டுமின்றி, இவ்வாறான மக்களில் பெண்களும் அதிகளவில் உள்ளனர். அவர்கள், சாலையோரம் ஆதரவின்றியும் எவ்வித பாதுகாப்புமின்றியும் தவித்து வருகின்றனர். இதில் மனநலம் குன்றிய பெண்களும் அடங்கும். எனவே, அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அரசுத் தரப்பில் கட்டப்பட்டுள்ள ஆதரவு இல்லங்களுக்கு பரிந்துரை செய்து வருகிறோம். மேலும், சிலரை அவர்களது குடும்பத்தினருடனும் இணைத்து வருகிறோம்.



சமீபத்தில், ஒரு நபர் ஆதரவின்றி சாலையில் பிச்சை எடுத்து சுற்றித்திரிந்து வந்தார். அவரை எங்களது குழுவினரால் மீட்டு பராமரித்து தற்போது, அவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது உணவை அவரின் சொந்த ஊதியத்தில் உண்டு மகிழ்ந்து வருகிறார். இவ்வாறான ஆதரவற்றோர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதன் மூலம் புட் பேங்க் அமைப்பினர்களாகிய நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...