தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் ஊராட்சித்துறை செயலர் தெரிவித்ததாவது:-



தொடக்க நிலையிலேயே சுற்றுச் சூழலின் முழு சுகாதாரம் தூய்மை செய்தல், புகைபோக்கி கருவி மூலம் கொசு மருந்து அடித்தல், குடிநீரை குளோரினேசன் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கலாம்.

அனைத்துத் துறை அரசு வளாகங்களையும் தூய்மைப்படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் தங்களது ஊராட்சிகளுக்கு உட்பட்டுள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் தூய்மையாக உள்ளது என்று உறுதி செய்யப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் மண்டல அலுவலர்கள் மற்றும் குழு அமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களையும் கண்காணித்திட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயலாற்றிட வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களும் அவர்களது பணியினை உணர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். காய்ச்சல் பரவுவதற்கு குடிநீர் விநியோகமும் ஒரு காரணமாகும். குடிநீரை டிரம்களில் சேகரித்து வைப்பதன் மூலம் லார்வா புழுக்கள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுகிறது. எனவே, குடிநீரை சரியான நேரத்தில் விநியோகம் செய்து தேக்கி வைப்பதை தடுப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். மேலும், சுகாதார துறை விரைவான குழுக்கள் அமைக்கப்பட்டு வட்டார அளவில் கண்காணிக்கப்பட வேண்டும். அக்குழுவானது ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும் மாலை தலைமை அலுவலர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சுழற்சி முறையில் 6 நாட்களும் வட்டாரங்களில் பணிகள் மேற்கொள்வதன் மூலம் காய்ச்சலை தடுக்க முடியும்.

மேலும், திட்ட இயக்குநரால் (மகளிர் திட்டம்) சுகாதாரத் துறையுடன் மகளிர் சுய உதவிக் குழ உறுப்பினர்களை அணி திரட்டி இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, வணிவரித்துறை இணை ஆணையர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, பொள்ளாச்சி சாராட்சியர் காயத்ரி கிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பானுமதி, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...