கோவையில் மக்கிய பொருட்களிலிருந்து மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி பட்டறை

கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் இந்திய பிளாஸ்டிக் நிறுவனம் கோவை அத்தியாயம் இணைந்து நடத்தும் மக்கிய பொருட்களிலிருந்து தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து கோவை உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியை பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் இல்லாத நகரமாக்குவதற்காக கோவை மாநகராட்சி சார்பாக ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் இந்திய பிளாஸ்டிக் நிறுவனம் கோவை அத்தியாயம் இணைந்து நடத்தும் மக்கிய பொருட்களிலிருந்து தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து கோவை உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவையில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி பட்டறையில் புதிய முறைகள் மூலம் தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிக்க உற்பத்தியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்ற வழக்கமான பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்வது குறைக்கப்படும். உற்பத்தியாளர்கள் தங்களிடம் தற்போதுள்ள இயந்திரங்கள் மூலமாக மக்கும் பைகள் தயாரிப்பதற்கான தேவையான பயிற்;சிகள் அளிக்கப்படும். இந்த புதிய முறையை பயன்படுத்துவது மூலம் சிறிய உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மக்கும் பைகளை குறைந்த விலையில் தயாரித்துக்கொள்ளலாம். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் தகவல் தெரிந்துகொள்வதற்கு எஸ்.சீனிவாசன் அவர்களை 9994859966 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் [email protected] மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 

முதலில் வரும் 100 உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கைகளில் முன்னுரிமை வழங்கப்படும். கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடடின் இந்த புதிய முயற்சியில் கோவை உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...