மக்கள் குறை தீர்ப்பு முகாமில் வெறிச்சோடி காணப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.



கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதையடுத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.



அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலதிற்கு மனு அளிக்க வருபவர்கள் தீ குளிக்க அவ்வப்போது முயற்சி மேற்கொள்வது வாடிக்கையாகி விட்ட நிலையில் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த சில வாரமாக தீவிர சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முதற்கொண்டு அனைவரும தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இன்று வெளி ஆட்களின் வாகனங்கள் அனைத்தும் வெளியே நிறுத்தபட்டது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், இன்று மனுக்களும் குறைவாகவே வந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...