அதிமுக அணியில் சேர்க்கவில்லை என்றால் பல ரகசியங்கள் வெளியிடப்படும்- தினகரன் அணி நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

அதிமுகவில் மூன்று அணிகளும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும் எனவும் ரகசியங்களை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது என கோவை டி.டி.வி.தினகரன் ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எச்சரிக்கை விடுத்தார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜின் கார், பீளமேடு அருகே இன்று காலை அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. காரில் அவரது மகன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த எம்.பி.நாகராஜ், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விபத்து குறித்து கார் ஓட்டுனர் மற்றும் காவல் துறையினரிடம் கேட்டறிந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது அவர் கூறியதாவது:- "அதிமுகவில் அணிகள் என்று கிடையாது. கருத்து வேறுபாடுகளால் மட்டுமே பிரிந்து இருக்கின்றோம். அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். 

ஜெயா டி.வி-க்கான பணிகளை 5 ஆண்டுகளாக தான் கவனித்து வந்தேன். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அனைவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே தன்னைப் போன்றவர்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தங்களை ஒதுக்கி வைத்து விட்டு செயல்படுகின்றனர்.

மூன்று பேரும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும். ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கில் கூட்டு சதி என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கிற்காகவே சசிகலா சில காலம் விலக்கி வைக்கப்பட்டு இருந்தார். டி.டி.வி. தினகரன் கட்சிக்காகவே சிறைக்கு சென்றார். சசிகலாவிடம் கட்சி பதவிக்காக சென்று நிற்காதவர் என எவருமே கிடையாது. பல உண்மைகளை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது. கூட்டணிகளை கூட இறுதி செய்தது சசிக்கலாதான். 

அதிமுக-வுடன் கூட்டணி வைத்த கட்சித்தலைவர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீட்டுகளை முடிவுசெய்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும். இன்று நடந்த இந்த விபத்து இயற்கையாக நடந்ததாக இருக்கலாம் அல்லது தன்னை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டதாகக் கூட இருக்கலாம்" என நாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...