மகளிர் திட்டம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வேளாண்மை அலகு (மகளிர் திட்டம்) மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 1ம் தேதியன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் பல்கலைக் கழக வளாகம், திருமந்திரம் கலையரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த இலவச வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-வது முதல் பட்டயப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் தங்களது சுயவிபரம், கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதி சான்று அசல் மற்றும் நகல்கல் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...