கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரியும் பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிடக்கோரியும் அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை ஆவாரம்பாளையம் - கணபதி பகுதியில் உள்ள ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடந்து நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் அளவை குறைக்க நெடுஞ்சாலைதுறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதை கண்டித்து கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது மேம்பால பணிகளை விரைந்து துவங்க வேண்டும் எனவும், பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கலந்து கொண்டார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...