மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகதிற்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் இழைத்து விட்டதாக கூறி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.



மருத்துவ கல்வி சேர்கையில் மத்திய அரசின் நீட் நுழைவு தேர்வுவிலிருந்து விலக்கு அளிக்க கோரி பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியது. நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறிய மத்திய அரசு அவசர சட்டதிற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என வழக்கு விசாரணைக்கு வந்த போது தெரிவித்தது.

இது தமிழக கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்களுக்கு மிக பெரும் துரோகத்தை இழைத்து விட்டதாக கூறியும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை எனக் கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியனர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...