முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கோவை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்ததாவது; 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெறும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. 

அதன்படி 2016-2017-ம் ஆண்டின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களில் முதல் மதிப்பெண் மற்றும் இராண்டாம் மதிப்பெண் பெற்றுள்ள சிறார்க்களுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து முறையே ரூ.5,000 மற்றும் ரூ.3000 வழங்கப்படும். முன்னாள் படைவீரர் படைவிலகல் சான்றின்படி தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களது சிறார்களின் மதிப்பெண் பட்டியல் நகல்கள், தங்களின் படைப்பணிச் சான்று மற்றும் அடையாள அட்டை ஆவணங்களுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...