அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறுவது ஆளுநரின் பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என துரைமுருகன் பேட்டி


அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ள நிலையில் உட்கட்சி தகராறு அதில் தலையிட முடியாது என கவர்னர் சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அதிமுகவில் உள்ள 19 எம்.எல்.ஏக்களும் தனி தனியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர் எனவும், ஒ.பி.எஸ் தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் வெளியேறிய போது மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என தெரிவித்த ஆளுநர் தற்போதைய சூழ்நிலையில் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் இது உட்கட்சி தகராறு தலையிட முடியாது என சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என தெரிவித்தார்.

ஆளுநர் மெளனம் சாதிப்பதற்கு உள்நோக்கம் எதுவும் இருக்கின்றதா என்பதை அவரிடம் கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், மத்திய அரசின் தலையீடு இல்லாமல் ஆளுநர் செயல்பட மாட்டார் எனவும் தெரிவித்தார். ஆளுநர் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என தெரிவித்தவர் தனக்கு கவர்னர் மீது இன்னமும் நம்பிக்கை இருப்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...