தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஜவஹிருல்லா, தலைவர்-மனித நேய மக்கள் கட்சி


ஆளுநர் வித்யாசாகர்   ராவ்வை எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் சந்தித்து  சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்தார்.

மியான்மர் நாட்டிலுள்ள முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், அம்னிஸ்டி சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக மியான்மர் ராணுவம் ரோகிந்தியா பகுதியில் முஸ்லீம்களை அழித்து வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ஆங் சுவான் சுகி மியான்மருடைய அதிபராக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இனப்படுகொலைகள்

நடத்தப்படுவதாகவும், சர்வதேச நாடுகள் இந்த படுகொலைகள் குறித்து அமைதிகாத்து வருவதாக கூறியவர், இந்தியா அரசு உடனடியாக மியான்மரை கண்டிக்க வேண்டும் என்றவர் மியான்மர் உடனான தூதரகத்தை திரும்பபெறவேண்டும் என்றார். மேலும்.இது குறித்து ஐ நா மனித உரிமை அமைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஜவஹிருல்லா தெரிவித்தார். 

இன்று காலை திமுக, சிபிஎம், விடுதலை. சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழக பொறுப்பு  ஆளுநரை பார்த்து சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் எனவும்  எடப்பாடி அரசின் மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை  நடக்க உத்திரவிட கூறியதாக தெரிவித்தார். ஜனநாயகத்தை காப்பதற்காகவும், அரசியல் அமைப்பை காப்பதற்காகவும் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...