அசல் ஓட்டுனர் உரிமத்தை உரிமையாளர்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்- காவல்துறை ஆணையரிடம் டாக்சி ஓட்டுனர்கள் மனு

வாகனம் ஓட்டும் போது ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருப்பது அவசியம் என்றும், செப்டம்பர் 1 முதல் கட்டாயமாக ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் சமீபத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறையினர் ஒரிஜினர் லைசன்ஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர். 

இந்த நிலையில், அனைத்து வாகன ஓட்டிகளும் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒரிஜினல் லைசன் வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கடும் என்னும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வாடகை கார் ஓட்டும் ஓட்டுநர்கள் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



வாடகை கார்களை இயக்கும் ஓட்டுனர்கள், அவர்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வண்டியின் உரிமையாளரிடம் கொடுக்க வேண்டியுள்ளது.

வாகனத்தை ஓட்டுனர்களை நம்பி ஒப்படைப்பதற்கு சாட்சியாக எண்ணி உரிமையாளர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அரசின் புதிய அறிவிப்பால் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, வாகன உரிமையாளர்கள் வாங்கி வைத்துள்ள அசல் ஓட்டுனர் உரிமத்தை, மீண்டும் ஓட்டுனர்களிடமே ஒப்படைக்க ஆணையிட வேண்டும்.

இவ்வறு, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் மனு அளித்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...