தியாகத் திருநாளான பக்ரித் பண்டிகை - கோவை மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்



இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் ரமலானுக்கு அடுத்து கொண்டாடும் இரண்டாவது பெருநாள் பக்ரீத் பண்டிகையாகும். 

நபிகள் நாயகத்துக்கு முந்தைய இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் அவர்கள் தவமிருந்து பெற்ற தன் குழந்தையை இறை கட்டளையின்படி பலியிட துணிந்த தியாகத்தை நினைவுகூர்ந்திடும் வகையில்தான் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.



இறையச்சம் இருந்தால்தான் இறையின் கட்டளைகளை நிறைவேற்ற இயலும் என்பதை உணர்த்தும் வகையில், இறைவனுக்குப் பிள்ளையைப் பலியிடும் மாபெரும் தியாகத்தைச் செய்ய இறைதூதர் இப்ராஹிம் துணிந்தார். ஆனால், இதனைத் தடுத்த இறைவன், ஆட்டை பலியிட செய்தார் என்றும், அதனடிப்படையில் காலம் காலமாக இஸ்லாமியர்கள் நினைவுகூர்வதே இப்பண்டிகையாகும். 



'ஈதுல் அழ்ஹா' என்னும் தியாகப் பெருநாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறையின் பெயரால் அறுத்து பலியிட்டு இறைச்சியை அனைவரும் பகிர்ந்துண்ணும் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது.



இந்த நன்னாளை, முன்னிட்டு, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகளில், இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகை நடத்தி இறைவனை வழிபட்டனர். மேலும். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் கூறிக் கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...