ஆமினி பேருந்து- வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி : 32 பேர் படுகாயம்



உடுமலை அருகே ஆமினி பேருந்து- வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக வேன் மூலம் பயணித்தனர்.

வேன்-ஐ திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜீவானந்தம் (30) என்பவர் இயக்கி வந்தார்.

இந்நிலையில், வேன் உடுமலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆமினி பேருந்தின் மீது மோதியது. 



இந்த விபத்தில் ஓட்டுனர் ஜீவானந்தம் உட்பட வேனில் இருந்த ரங்கராஜ் (40), காமாட்சி (40) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், ஆமினி பேருந்து மற்றும் வேனில் பயணித்த 32 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த 8 பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். மற்றவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...