வால்பாறை எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் அவதி

வால்பாறை பகுதியில் அமைந்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் இன்று அதிகாலை மூன்று காட்டு யானைகள் நுழைந்து நசீர் என்பவர் நடத்தி வந்த டீ கடையை உடைத்து சேதம் செய்தது.



இதனைத்தொடர்ந்து, வரட்டுப்பாறை அரசு துவக்கப்பள்ளி பகுதிக்குச் சென்ற அந்த காட்டு யானைக் கூட்டம், பள்ளியின் சத்துணவுக் கூட ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 2 மூட்டை அரிசியை சேதம் செய்தது.



இதனிடையே, சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து மூன்று காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...