நீலகிரி கோடப்பமந்து கால்வாயினை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், உதகை, கோடப்பமந்து கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குப்பைகளுடன் மழைநீர் கோடப்பமந்து கால்வாயில் வழிந்தோடியதால், ஆங்காங்கே குப்பைக் கழிவுகள் தேங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.



இந்நிகழ்வின் போது, உதகை ஏரியினை வந்தடையும் கோடப்பமந்து கால்வாயில் கனமழை பெய்யும்பொழுது ஏற்படும் வெள்ளநீர் தேங்காமால் சென்றடையவும், உதகை ரயில் நிலைய சாலையில் மழைநீர் தேங்காமல் வழிந்தோட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல மத்திய பேருந்து நிலைய கால்வாய்களில் மழைநீர் தேங்காமல் முறையாக கோடப்பமந்து கால்வாயில் சென்றடைய உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்தி சீர்செய்யுமாறும், உதகை ஏரிக்கு கோடப்பமந்து கால்வாய் மூலம் வந்தடையும் மழைநீரில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளுமாறும் நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.



இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் (ம) ஆணையாளர் (பொ), மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...