தமிழகத்தில் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால் தள்ளிப்போனது. தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் தேர்தலை நடத்துவதற்கு காலதாமதமாகியது.

இதுவரை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இத்தேர்தலுக்கான அட்டவணையை வரும் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு பொதுநலன் வழக்கு அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...