அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்பப் பயிற்சி

கோவை மாவட்டத்தில், பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தற்காப்பு மற்றும் நம் பாரம்பரிய கலையினை அறிந்துகொள்ளும் வகையில் அக்னி சிறகுகள் சார்பில் இலவசமாக சிலம்பம் பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.



இதற்கான துவக்க விழா பொள்ளாச்சி அருகே உள்ள சங்கபாளையம் பஞ்சாயத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது, பிஷப் அப்பாசாமி கல்லூரி மாணவர் கார்த்திக் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். 

இத்திட்டம் குறித்து இதன் தலைவர் எம்.பிரபு கூறியதாவது:- பயிற்சியாளர்கள் இந்த பள்ளியின் மாணவர்களுடன் முடிந்தவரை நீண்டகால பயிற்சியினை தொடரவும் மற்றும் எதிர்காலத்தில் மற்ற அரசு பள்ளிகளில் இத்திட்டத்தினை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.



இப்பயிற்சிகளுக்கு மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மாணவர்களின் அதீத ஆர்வத்தினைக் காணும்போது பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.



மாணவர்களின் கல்வி நேரம் பாதிக்கப்படாத வகையில் பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்படும். புத்தகங்கள் மற்றும் ஆய்வுளைத் தவிர மாணவர்கள் இதுபோன்ற செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய பயிற்சிகள் இளம் வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

மேலும், கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளிலும் இப்பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...