கோவையில் சுற்றுச்சூழலிற்கு நன்மை விளைவிக்கும் வகையில் இந்தியன் தபால் நிலைய இடத்தில் மரக்கன்றுகள் நடவு


கோவை மாவட்டம், சிட்கோ அருகே அமைந்துள்ள இந்தியன் தபால் நிலையம் பகுதியில் புதர்களால் இயற்கைக்கு கேடுஏற்படுத்தி வந்த 25 சென்ட் நிலப்பரப்பில் தற்போது இந்தியன் தபால் நிலையத்தின் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 



கோவை, சிட்கோ அருகே தொழில் பேட்டை மற்றும் இந்தியன் தபால் நிலைய அலுவலகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் முற்புதற்கள் மற்றும் இதர கழிவுகளால் நிலம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை, கோ கிளீன் மற்றும் கிரீன் பேஸ் II ஆகியவை இணைந்து குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூலம் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, இப்பகுதியில் சுற்றுச்சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தாக வகையிலான மரங்களை நடவு செய்ய திட்டமிடப்பட்டது.



அதன்படி, கோவை தபால் நிலைய தெற்கு துணைப் பிரிவு ஆய்வாலர் ஏ.என்.சாந்தினி பேகம் தலைமையிலான குழுவினர், மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்ட்டர் ஜெனரல் சாரதா சம்பத், தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோர் இணைந்து மரக்கன்றுகளை நடவுசெய்தனர்.



இதுகுறித்து கோவை தபால் நிலைய தெற்கு துணைப் பிரிவு ஆய்வாலர் ஏ.என்.சாந்தினி பேகம் கூறுகையில், "கருவேலமரங்கள் உள்ளிட்டவற்றால் இயற்கைக்கு கேடுவிளைவிக்கும் வகையில் காணப்பட்ட இப்பகுதியினை சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் மாற்ற திட்டமிட்டோம். அதன்படி, தற்போது 25 சென்ட் அளவுகொண்ட இடம் தூய்மைபடுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை இயற்கை சூழலுக்கு உகந்ததாக இருக்கும்" என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...