அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மொட்டையடித்து போராட்டம்


நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரயலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இன்று சமத்துவ கழகத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'மத்திய, மாநில அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வானது ஏழை எளிய மக்களின் படிப்பையும் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனால் ஏழை மாணவி அனிதா அதிக மதிபெண் பெற்றிருந்தும், மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவை போல யாரும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழக மக்கள் அனைவரும் இதே போல் மொட்டையடித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்' என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...