கோவையில் பெய்த கனமழையால் நீரில் மிதக்கும் வீடுகள் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பு

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்தோடுகிறது.

இந்நிலையில், சுங்கம் அருகே உள்ள கல்லுக்குழி பகுதி, நேற்று பெய்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வீட்டின் பாதி சுவர் அளவுக்கு நீர் தேங்கி கிடப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.



இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறும் போது, தனது தந்தை உடல்நலக் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது, மருத்துவ பரிசோதனை குறிப்புகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டன. இதனால், தனது தந்தைக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வேதனையுடன் அவர் கூறினார். 

ஒவ்வொறு ஆண்டும் பெய்யும் கனமழையால், வீடுகள் நீரில் மூழ்கி பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே செல்வதாகவும்,  குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வேறுஇடத்தில் வீடு கட்டித் தருவதாக அதிகாரிகள் அளிக்கும் வாக்குறுதிகளும் வாடிக்கையாகி விட்டதாக கல்லுக்குழி பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



எனவே, தற்போது தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பாதுகாப்பான இடத்தில் வீடுகளை கட்டித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழைக்கு இந்த பகுதியில் 3 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...