நீட் தேர்வு விவகாரம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜெயலலிதா கடிதம்

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. 

ஆனால், ஓராண்டுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இது, தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 





அதில், மத்திய அரசிடம் ஜெயலலிதா வலியுறுத்தியிருப்பதாவது:-  மருத்துவப் படிப்பிற்கான மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயல். நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு போதிய பயிற்சி மையம் இல்லை. அவ்வாறு இருந்தால், அதில் பயன்பெறக் கூடிய வசதியில்லாதவர்களாக உள்ளனர். 

சமூக - பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காகவே, தமிழக அரசின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், தொலைதூரக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், மாற்றம் செய்யக் கூடாது. எதிர்காலத்திலும், நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. 

இவ்வாறு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா,  பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...