அனிதாவின் மரணத்திற்கு நீதிகோரி கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம்



அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவி மாணவி அனிதாவின் மரணத்திற்க்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நேற்று (செப்.,5) கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், போத்தனூரில் ரயில் மறியலும் நடைபெற்றது. இதேபோல, கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். 

கோவை, சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதி தலைவர் ஹனீப்கான் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் அப்பாஸ் முன்னிலை வகித்தார். இதில், மத்திய மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் கட்சி நிவாகிகள் கலந்து கொண்டனர்.



கவுண்டம்பாளையத்தில், சட்டமன்ற தொகுதி தலைவர் அமீர் அப்பாஸ் தலைமையில் ஜி.என்.மில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதில், தொகுதி செயலாளர் யாசர், மாவட்ட செயலாளர் ரோஷன், மத்திய மாவட்ட தலைவர் அப்துல் காதர், பி.எப்.ஐ துடியலூர் டிவிசன் தலைவர் உசேன் மற்றும் கட்சி செயல்வீரர்கள் மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



அதேபோல், கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிணத்துக்கடவு தொகுதி தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு, தெற்கு மாவட்ட தலைவர் அன்சர் செரீப் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி நிர்வாகிகள் தாஜுதீன், ஆரீப், கமால், முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த ரயில் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். 



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...