நீலகிரி மாவட்டத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்த விழிப்புணர்வு முகாம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் மீக்கேரி கிராமத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று (செப்.,5) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இதனை தொடங்கி வைத்தார்.

பின்னர், முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசுகையில்,  நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மூலிகை பயிர்கள் என அனைத்து வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. 

உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை நேரடி உணவாக உட்கொள்வதால், மருந்துகளில் உள்ள இரசாயன பொருட்களின் நச்சுத்தன்மை மனிதர்களுக்கு பல நோய்களை உருவாக்குகின்றன. எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறி மற்றும் பழங்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட இரசாயன கொல்லிகள், அதிக அளவிலான உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து மகசூலை பெருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் பாதுகாப்பு கவசங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை வட்டத்தில் வரும் 07-ம் தேதி குந்தசப்பை பகுதியிலும், 14-ம் தேதி பிக்கட்டி பகுதியிலும், 19-ம் தேதி சோலூர் பகுதியிலும், 21-ம் தேதி இத்தலார் பகுதியிலும், 26- ம் தேதி கடநாடு பகுதிகளிலும்,  குன்னூர் வட்டத்தில் 13-ம் தேதி பிக்கோல் பகுதியிலும், 15-ம் தேதி கெரடா பகுதியிலும், கோத்தகிரி வட்டத்தில் 06-ம் தேதி கூக்கல் பகுதியிலும், 07-ம் தேதி தேனாடு  பகுதியிலும், கூடலூர் வட்டத்தில் 07-ம் தேதி  மாங்குழி பகுதியிலும், 13-ம் தேதி தஞ்ஜோரா பகுதியிலும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. 

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (கோவை) இல.பெருமாள் தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் டி.ஜெ.மீராபாய் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...