நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு - தற்காலிகமாக மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி

வேலூரில் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் சேர தனியாக நுழைவுத் தேர்வு நடத்தபடும். அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நீட்தேர்வு முறை அமல்படுத்தபட்டுள்ளது. நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு சி.எம்.சி. நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.எம்.சி. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ மணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக  சி.எம்.சி. நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்:- சுதந்திரத்துக்கு முன்பு ஆரம்பிக்கபட்ட சி.எம்.சி. மருத்துவ கல்லூரிக்கு தனி பாரம்பரியம் உள்ளது. அரசு உத்தரவுப்படி நீட் தேர்வை ஆதரிக்கிறோம். ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சி.எம்.சி. தனியாக நுழைவுத்தேர்வு நடத்தும். அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தபடும். 

அவர்களின் சமூக அக்கறை குழுவாக பணியாற்றும் பண்பு கிராமங்களில் சேவை செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தபடும். நீட்தேர்வு அடிப்படையிலான நேரடி சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அக்டோபர் 11-ம் தேதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்  என்றனர்.

100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது. மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அரசு உடனடியாக தடையில்லா நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...