கோவையில் டிரிப் பேக்டரியின் முதலாவது விடுமுறை அங்காடி துவக்கம்

பயணம் செய்வோருக்கான புதிய அனுபவத்தை தரும் வகையில் கோவையில் முதலாவது விடுமுறை அங்காடியை டிரிப் பேக்டரி துவங்கியுள்ளது. இதனை நடிகர் மற்றும் இயக்குநருமான பாக்யராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நடிகை பூர்ணிமா பாக்யராஜ் குத்துவிளக்கேற்றினார்.



இதனைத்தொடர்ந்து, முதல் சுற்றுலா பயணத்திற்கான டிக்கெட்யை ஸ்ரீ அண்ணப்பூர்ணா ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். இந்நிறுவனம் ஏற்கனவே, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் துவங்கி, தற்போது கோவையிலும் அடியெடுத்து வைத்துள்ளது.



பெரும்பாலான பயணிகள் தங்களது விடுமுறை சுற்றுலா பயணத்தேவைக்கு நேரடியாக ஏஜெண்டுகளை தேடுகின்றனர். அல்லது நேரடியாக புக்கிங் செய்கின்றனர். ஆன்லைனில் 18 சதவிகிதம் பேர் மட்டுமே பதிவு செய்கின்றனர். எனவே, பயணம் செய்வோருக்கான அனைத்து தேவைகளும் டிரிப் பேக்டரியின் மூலம் கிடைக்க கோவையில் இந்நிறுவனம் துவங்கியுள்ளது.



இது குறித்து டிரிப் பேக்டரியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் அமித் அகர்வால் கூறுகையில், "விடுமுறையில் உள்நாட்டுப் பயணம், வெளிநாட்டுப் பயணம் அவரவர் விரும்பும் விதத்தில் அமைய தேவையான அனைத்து தொழிநுட்ப வசதிகளையும் டிரிப் பேக்டரி ஹாலிடே ஸ்டார் கொண்டுள்ளது. எங்களது தொடர்பில் உள்ள சப்ளையர், ஏர்லைன் பங்குதாரர்கள் சிறப்பான விலையை அளிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு குறைவான செலவு தான் ஏற்படுகிறது" என்றார்.

டிரிப் பேக்டரி நிறுவனர் வினாய் குப்தா பேசுகையில், "ஒவ்வொரு விடுமுறை பயணிகளையும் 2020-ம் ஆண்டுக்குள் சென்றடைய வேண்டும் என்பதே டிரிப் பேக்டரியின் திட்டம். பயணிகளுக்கு விரைவான சேவை, அருமையான அனுபவங்களை ஈடுஇணையற்ற வகையில் தர வேண்டும். டிரிப் பேக்டரியில் நுழைவோர் சில நிமிடங்களில் சுற்றுலா திட்டத்தை பெற முடியும். முழுமையான விடுமுறை சுற்றுலா அனுபவம் பல மடங்கு உயர்ந்ததாக அவர்களுக்கு தெரியும்" என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...