கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுத்தாளரும், லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியருமான கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர். சமூக அவலங்கள் குறித்து எழுதிய லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



அதன்படி, கோவையில் இன்று மாலை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தொடர்ந்து, செய்தியாளர்களிடையே தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பின் ஆசிரியர் கண்ணன் பேசுகையில், 'மதச்சார்பற்ற கருத்துக்களை தொடர்ந்து எழுதி வந்த கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்கு உரியது. அவர் விட்டுச்சென்ற பேனாவை மற்ற பத்திரிகையாளர்கள் தாங்கிப்பிடிப்பார்கள்.

வகுப்புவாதம் பேசுபவர்கள் கருத்தியல் ரீதியாக மோதாமல், ஆயுதங்களை கொண்டு கொலை செய்வது ஏற்க முடியாத ஒன்று. இந்த அச்சுறுத்தல்களுக்கு முற்போக்கு எழுத்துக்கள் என்றும் அடிபணியாது. எங்கள் பேனாவை வலிமையான ஆயுதமாக எடுத்து தொடர்ந்து மதவெறிக்கு எதிரான கருத்துக்களை எழுதுவோம்' என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...