இன்சூரன்ஸ் மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியால் காப்பீட்டில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, உடனடியாக மத்திய அரசு இன்சூரன்ஸ் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜிஎஸ்டி வரி விதிப்பின் படி இன்சூரன்ஸ் பிரீமியத் தொகையின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நாற்பது கோடிக்கும் மேலானவர்கள் இன்சூரன்சில் சேர்ந்துள்ள நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரியின் காரணமாக பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புதியதாக இன்சூரன்சில் சேருபவர்களின் எண்ணிக்கை இதன் காரணமாக குறைந்து வருகிறது. 

எனவே, உடனடியாக மத்திய அரசு இந்த பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. அதில் கோவையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர். இந்த கையெழுத்துக்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

இவ்வாறு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...