மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து- உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்று வயது குழந்தை



பெரிய நாயக்கன்பாளையம் அருகே சொகுசு காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெரியநாயக்கன் பாளையம் லக்‌ஷ்மி மெஷின் வொர்க்ஸ் அருகே சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த கார் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி பெரும்விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்தம்பதியினர் மற்றும் மூன்று வயது குழந்தை படுங்காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தோர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், காரை ஓட்டிவந்தவர் மது போதையில் இருந்ததாகவும், வேகமாக காரினை இயக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இவர்தான் வண்டியை ஒட்டி வந்தவர்   









Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...