நீட் தேர்வுக்கு எதிராக அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் : 30க்கும் மேற்பட்டோர் கைது


நீட் விவகாரம் மற்றும் அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் 6-வது நாளாக இன்றும்(செப்.,7) நீடிக்கிறது. 



இந்த நிலையில், கோவை, ஹோப் காலேஜ் பகுதியில் கோவை - சேலம் நெடுஞ்சாலையில் எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் இன்று (செப்.,7) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், மாணவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். 



ஆனால், கலைந்து செல்ல அவர்கள் மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே, மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கோவை அரசு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...