நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா

மதுரையை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரது மனைவி சபரிமாலா (34). இவர், திண்டிவனம் அடுத்த வைரபுரம் ஊராட்சி. ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனது ஏழு வயது மகன் ஜெயசோழனையும், அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (செப்.,6) பள்ளிக்கு வந்த ஆசிரியை சபரிமாலா, பணியை புறக்கணித்து விட்டு, தனது மகன் ஜெயசோழனுடன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்தக் கோரியும், பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையுடன் ஆசிரியை நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 



அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வெள்ளிமேடுபேட்டை போலீசார், போராட்டம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இதை ஏற்று சபரிமாலா தனது போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில், இன்று (செப்.,7) மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணனை சந்தித்த சபரிமாலா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தையும் வழங்கினார். 

பணியை ராஜினாமா செய்தது குறித்து சபரிமலா கூறுகையில், "அரசு பணியில் இருப்பதால் சமூக பணிகளில் ஈடுபட முடியவில்லை. இதனால், பதவியை ராஜினாமா செய்தேன். கிராமந்தோறும் சென்று படிக்காத இளைஞர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...