தென் மாவட்டத்திற்கு ரயில்கள் இயக்கப்படாததை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம்



கோவை மாவட்டம் போத்தனூர் - பொள்ளாச்சி இடையேயான அகல ரயில்பாதை பணிகள் முடிந்து நான்கு மாதங்களாகியும், நாள்தோறும்  ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இவ்வழியாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது, தென் மாவட்டத்திற்கு ரயில்கள் இயக்கப்படாததற்கு, ரயில்பெட்டிகள் இல்லை என மத்திய அரசு கூறுவது மானக்கெடு எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...