கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ரயில் மறியல்

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கோவை வழக்கறிஞர்கள் இன்று ரயில் மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.



ரயில் நிலையத்திற்குள் புகுந்த வழக்கறிஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் இருந்து வந்த அலப்பி-பொக்ரோ ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் மீது ஏறிய வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி கூறுகையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை எனில் மீண்டும் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...