நீலகிரியில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கோழிப்பண்ணை, வீட்டுதோட்டம் ஆகியவை அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு இடங்களில் கோழிப்பண்ணை மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கரிக்கையூர், பங்களாபடிகை ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு கோழிபண்ணை வைப்பதற்கான இடத்தையும், கடினமாலா ஊராட்சிக்குட்பட்ட கோத்திமுக்கு பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான இடத்தினையும் ஆய்வு செய்தார்.

மேலும், பழங்குடியினரிடையே இத்திட்டத்தைப்பற்றி எடுத்துக்கூறி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மெட்டுக்கல்  பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உணவு இருப்புகள் மற்றும் சமையலறையையும், மற்றும் பங்களாபடிகை ஊராட்சி ஒன்றியபகுதியில் உள்ள துவக்கப் பள்ளியையும், சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) பழனிசாமி, உதவி இயக்குநர் (கிராம ஊராட்சி) மேகநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...