ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்

பௌத்த நாடாக இருக்கின்ற மியான்மாரில் ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.



கடந்த சில வருடங்களாக ரோஹிங்யா இன மக்களுக்கு எதிராக தீவிர பௌத்த வாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்ந்தும் உச்சமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக மட்டும் ஏராளமான ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3500 பேர் எல்லையை கடந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து, மியான்மரில் உள்ள ரோஹிங்யா இன முஸ்லிம் மக்கள் மீதான தாக்குல் நடைபெற்று வருகிறது.



இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று குன்னூரில் நீலகிரி மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஹாஜி. ஜம் ஜம் முபாரக் தலைமை வகித்தார். இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளி ஜமாத்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், பாப்புலா் பிரண்ட் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...