பழைய ஆயக்கட்டின் பாசனத்திற்கு ஆழியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு


கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :-  கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டின்  ஒரு போக பாசனத்திற்கு, நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து 10.09.2017 (நாளை) முதல் 08.01.2018 முடிய 120 நாட்களுக்கு மொத்தம் 800 மி.க. அடிக்கு மிகாமல் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

மேலும், நஞ்சை பாசனத்திற்கு ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 5 வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இதனால், 6,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஆழியாறு, கோட்டூர், ஆனைமலை ஆகிய பகுதிகளுக்குட்பட்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு ஏதுவாக இந்த தண்ணீர் திறப்பு அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் பயனடைய வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...