கோவையில் புளூ வேல் விளையாடிய பள்ளி மாணவர்: கவுன்சிலிங் கொடுக்கும் போலீசார்

சமீபத்தில் உலகம் முழுவதும் ‘புளூவேல்’ என்ற இணைய தள விளையாட்டு பரவியது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டில் 50 சவால்கள் அளிக்கப்படுகிறது.

ரயில் பாதையில் ரெயில் வரும் போது நின்று செல்பி எடுப்பது, பேய் படம், ஆபாச படம் பார்ப்பது, நடுநிசியில் மயானம் செல்வது என தினம் ஒரு சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவாலை செய்பவர்கள் அதனை இணையத்தில் பதிவு செய்கின்றனர். ஏற்கனவே, விளையாடுபவர்களை பற்றிய முழுமையான தகவல்களை விளையாட்டு நிர்வாகிகள் பெற்றுள்ளனர்.

50-வது நாள் விளையாடுபவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்யாவிட்டால் அவர்களைப் பற்றிய ரகசியம் வெளியிடப்படும் என்று மிரட்டப்படுகின்றனர். இதற்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ‘புளூவேல்’ விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்த விளையாட்டு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த விளையாட்டின் மூலம் இந்தியாவில் தற்கொலை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

எனவே, ‘புளூவேல்’ விளையாட்டுகளால் மாணவ, மாணவிகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் போலீஸார் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர். மேலும், இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 104 என்ற உதவி எண்ணை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன ஒரு பகுதியாக, கோவையில் புளூவேல் விளையாட்டை  விளையாடிய பள்ளி மாணவர் ஒருவருக்கு போலீசார் கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர் அன்னூரை அடுத்த மூலகுரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவர், கடந்த சில தினங்களுக்கு முன் புளுவேல் விளையாட்டினை விளையாட தொடங்கியதாக தெரிகிறது.

பள்ளி மாணவர் இந்த விளையாட்டு செயலியை அறிந்த அன்னூர் போலீசார், அந்த மாணவர் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு அறிவுரை கூறி பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.  தொடர்ந்து, புளூ வேல் விளையாட்டை இனி விளையாட வேண்டாம் என்றும் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...