வெள்ளலூர் குளத்தில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை ராமநாதபுரம் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது தந்தை வெள்ளலூர் கக்கன் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ரமேஷின் மகன் தினேஷ் தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தான். 

இன்று (09.09.2017) காலை வெள்ளலூர் குளத்தில் குளிப்பதற்காக தினேஷ் சென்றுள்ளான். கடந்த சில தினங்களாக கோவையில் பெய்து வரும் பலத்த மழையால், வெள்ளலூர் குளத்தின் கரைப் பகுதிகள் சேறும், சகதியுமாய் இருந்தன. 

இந்நிலையில், கரையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் தினேஷ், கால் தவறி குளத்தில் விழுந்தார். இதையறிந்து. அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பதற்குள், சிறுவன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...