சிதிலமடைந்த நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் - வெளியேறுமாறு குடியருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோவை பிரிவின் மூலம் தவணை முறையிலான சொந்த குடியிருப்புகளும், அரசு அலுவலர்களுக்கான வாடகை குடியிருப்புகளும் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, வழங்கப்பட்ட  குடியிருப்புகளில் சிதிலமடைந்துள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற கோவை வீட்டு வசதிப்பிரிவின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செயற்பொறியாளர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோயம்புத்தூர் வீட்டு வசதி பிரிவின் கீழ் சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் தவணை முறையில் வழங்கப்பட்ட 960 அடுக்குமாடி குடியிறுப்புகளும், சித்தாப்புதூர் திட்டப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஓதுக்கீடுதாரர்கள் குடியிருந்து வருகின்றனர். 

தற்சமயம், பெறப்பட்ட ஒதுக்கீடுதாரர்கள் தங்களது வீடுகளை முறையாக பராமரிக்காததாலும், கனமழை பெய்து வருவதாலும் சிதிலமடைந்து, குடியிருக்க தகுதியில்லாத நிலையில் உள்ளது. எனவே, மேற்கொண்ட குடியிருப்புகளை காலி செய்துவிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்தால் அதனை இடித்து விட்டு புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இது, தொடர்பாக ஏற்கனவே பலமுறை வீட்டு வசதி வாரிய கோவை பிரிவின் எச்சரிக்கை நோட்டீஸ்கள் மூலம் ஒதுக்கீடுதாரர்கள் மேற்கண்ட குடியிருப்புகளை தாங்களாகவே, காலி செய்யுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அறிவிப்பிற்கு பின்னரும் காலி செய்ய தவறி தொடர்ந்து குடியிருக்க முயற்சி செய்யும் ஒதுக்கீடுதாரர்கள் தங்களது உடமைக்கோ, உயிருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்களே பொறுப்பு என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கோவை பிரிவின் செயற்பொறியாளர்ஃ நிர்வாக அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...