பதவி மற்றும் பணத்தை பாதுகாப்பதில் மட்டுமே தமிழக அரசு குறியாக உள்ளது - சு.ப.உதயகுமார் குற்றம்சாட்டு

கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கத்தில் ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் அரசின் அடக்குமுறையை கண்டித்து கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,  கூடங்குளம் அணு உலையில் உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் மக்களுக்கு வீடுகள் கட்டுவதில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது.  இந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரணை முறைப்படி நடத்த வேண்டும். அணு உலையை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் வசிப்பதால் மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

தொடர்ந்து, அவர் பேசியதாவது :-  நீட் தேர்வு என்பது குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவம். ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.  இத்தேர்விற்கு எதிராக சென்னையில் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்திற்கு வரவேற்கத்தக்கது.  நீட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றிக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும், தமிழக அரசு மக்களை பற்றி கவலைப்படாமல் பதவி நாற்காலிகளையும், சேர்த்து வைத்துள்ள பணத்தை பாதுகாப்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இவ்வாறு உதயகுமார் குற்றம்சாட்டினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...