தொடர் கனமழையால் குன்னூர் தரைப்பாலம் சேதம் - போக்குவரத்து பாதிப்பு

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை. ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்த நிலையில்,  கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் எனப்படும் மரப்பாலம் உடைந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தரைப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால், சில மணி நேரங்களில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  



குன்னூர் தாலுக்காவில் பல இடங்களில் பெய்து வரும் கனமழையால், மண் சரிவும், மரங்களும் விழுந்துள்ளதால் போக்குவரத்து லேசாக பாதிக்கப்பட்டுள்ளது. துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கனமழை காரணமாக, குன்னூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மண்சரிவின் காரணாக ஊட்டி- குன்னூர் இடையே மட்டும் மலை ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் இயக்கப்படுகிறது

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...