கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 80-க்கும் மேற்பட்டோர் இன்று (11,09,2017) காலாண்டுத் தேர்வை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். 

இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நீர் தேர்வுக்கு எதிராகவும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை  ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



இறுதியில், பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்ததால், பள்ளியில் பதற்றம் நிலவியது.

இதனைத்தொடர்ந்து மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீரமணி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன், தாமோதரன் ஆகியோரை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர். 

இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், "11ம் வகுப்பு பொதுத் தேர்வால் இரட்டை பணி சுமை ஏற்படுகிறது. தமிழகத்தில் நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...