கோவை மாநகராட்சியைக் கண்டித்து வரும் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி முடிவு

கோவை மாவட்ட தி.மு.க தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்றன.

பின்னர் கூட்டத்தில், கோவை மாநகராட்சி குப்பைகளுக்கு வரி, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகை வசூல் செய்வது உள்ளிட்ட ஆணைகளை உடனே ரத்து செய்யக் கோரி 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறியதாவது:- கோவை மாநகராட்சி புதிய வரி சீராய்வு என்ற அடிப்படையில் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அளவிடுவது, குப்பைகளுக்கு வரி போடுவது, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகையாக 4,000 ரூபாய் செலுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சேய்து வருகிறது. 

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 18-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிளமேடு, குனியமுத்தூர், குறிச்சி, கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சிங்காநல்லூர், பெரிய கடை வீதி, பாப்பநாயக்கன் புதூர் என அந்தெந்த பகுதிகளின் சார்பில் டவுன் ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...