நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதிச் சான்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவு

குமரி மகா சபையின் செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவர் தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் ஆஜரான புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், நவோதயா பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாகவும், 11,12 ஆம் வகுப்பில் தமிழ் கூடுதல் பாடமாக இருப்பதாகவும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10-ம் வகுப்பு தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 வகுப்புகளில் கூடுதல் பாடமாக கற்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும்  என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு,

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.

இது தமிழக அரசின் இரு மொழிக்கொள்கையை மீறும் விதத்தில் அமையாது. எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

மேலும், அதற்கான அடிப்படை தேவைகளை செய்வது குறித்தும் முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,  மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்ற இடைவெளியே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமையாததற்கு காரணம் என தெரிவித்தனர். 

இதனிடையே, ஜனவரி மாதத்தில் நவோதயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், முதல் 3 ஆண்டுகளுக்கு 240 மாணவர்கள் பயில்வதற்கான வசதியுடன் கூடிய தற்காலிக கட்டிடத்தில் பள்ளி இயங்கலாம் என விதியிருப்பதை புதுவை நவோதயா பள்ளி முதல்வர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், நவோதயா பள்ளியைத் தொடங்க அனுமதியும், இடமும் வழங்கினால், மத்திய அரசு பள்ளி கட்டமைப்பு வசதிக்காக ஒரு மாவட்டத்திற்கு 20 கோடி ரூபாயை வழங்குவதாகவும் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் 8 வாரத்தில் தடையில்லா சான்று வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...