குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வர வழிவகை செய்யும்படி திமுக கோவை மாநகர தெற்கு மாவட்டக் குழுவின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள குறிச்சி குளத்தில் தண்ணீர் நிரம்பினால் அது சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், அனைத்து ஆழ்குழாய் கிணறுகளுக்கும் நீர்வளமாகவும், குறிச்சி பகுதி மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஏதுவாகவும் இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நேரத்தில் பாலம் வேலை நடைபெறுகிறது என்று வாய்க்காலை அடைத்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதும் குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்து புட்டுவிக்கி என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணிக்காக தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குறிச்சி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, உடனடியாக குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்டுள்ள தடையை அப்புறப்படுத்தி குளத்தில் தண்ணீர் தேக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...